திருக்குறள்

1199.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு.

திருக்குறள் 1199

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு.

பொருள்:

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

மு.வரததாசனார் உரை:

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.